⚠️ 🌍மாதங்களில் நேட்டோ எல்லைக்குள் பாயப்போகும் ஏவுகணைகள்? விளாடிமிர் புட்டின் வகுக்கும் புதிய வியூகம்! 💣🌍
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) மேற்கத்திய நாடுகளுடனான மோதலை மேலும் தீவிரப்படுத்தி, வரும் மாதங்களுக்குள் நேட்டோ (NATO) உறுப்பு நாடுகளின் நகரங்களைக் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தக்கூடும் என இராணுவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கான பூர்வாங்க சோதனைகளில் ரஷ்யா ஏற்கனவே ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமீபகாலமாக போலாந்தில் ரஷ்யாவின் ஏவுகணைகள் விழுந்துள்ளதோடு, ருமேனிய எல்லைக்குள் ரஷ்ய ட்ரோன்கள் ஊடுருவியுள்ளன. உக்ரைன் போரில் எதிர்பார்த்த இலக்குகளை அடைவதில் ரஷ்யா சிரமப்பட்டு வரும் நிலையில், நேட்டோ நாடுகளுக்கு எதிராக புட்டின் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனப் பகுப்பாய்வாளர்கள் கருதுகின்றனர்.
📌 “தினசரி அச்சுறுத்தலைச் சந்திக்கும் நேட்டோ”
பிரித்தானிய இராணுவத்தின் முன்னாள் கேணல் ஃபிலிப் இங்க்ராம் (Philip Ingram) இது குறித்து கருத்து வெளியிடுகையில்:
“புட்டின் ஏற்கனவே வாரந்தோறும் ஐரோப்பிய மற்றும் நேட்டோ நாடுகளை இலக்கு வைத்து வருகிறார். ஜெர்மனியின் லைப்சிக் (Leipzig) விமான நிலையத்தில் வெடிபொருட்களுடன் கூடிய ட்ரோன்கள் காணப்பட்டதும், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மேல் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல,” எனத் தெரிவித்தார்.
மேலும், பால்டிக் நாடுகளின் வான்வெளியில் ரஷ்ய போர் விமானங்கள் ஊடுருவுவதும், கடலடித் தொடர்பாடல் கேபிள்கள் துண்டிக்கப்படுவதும், இணையத் தாக்குதல்கள் நடத்தப்படுவதும் நேட்டோ அமைப்பைச் சோதிக்கும் புட்டின் திட்டமிட்ட நடவடிக்கைகளே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
⚠️ சரத்து 5-க்கு அச்சுறுத்தல்
நேட்டோ அமைப்பின் 32 உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது அனைத்து நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டு பாதுகாப்பு வழங்கப்படும் என்பதை ‘சரத்து 5’ (Article 5) உறுதி செய்கிறது.
எனினும், வழக்கமான இராணுவ மோதலுக்கு வழிவகுக்காத வகையிலான ‘பன்முகப் போர் முறையை’ (Hybrid warfare) பயன்படுத்தி, போலாந்து அல்லது பால்டிக் நாடுகளான லத்வியா, எஸ்டோனியா மற்றும் லிதுவேனியா ஆகியவற்றின் எல்லைப் பகுதிகளை அல்லது முக்கியமான உள்கட்டமைப்புகளை ரஷ்யா இலக்கு வைக்கக்கூடும் என வல்லுநர்கள் நம்புகின்றனர். போலாந்து அதிபர் கரோல் நவ்ரோக்கிக்கும் (Karol Nawrocki) இது குறித்த எச்சரிக்கைகள் அமெரிக்க தரப்பிலிருந்து வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
💥 ரஷ்ய எண்ணெய் ஆலை மீது உக்ரைன் தாக்குதல்: 13 பேர் பலி
இதனிடையே, ரஷ்யாவின் நிஸ்னெகாம்ஸ்க் (Nizhnekamsk) நகரிலுள்ள டாட்நெஃப்ட் (Tatneft) நிறுவனத்திற்குச் சொந்தமான ‘டானெகோ’ (TANECO) எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைன் திங்கள்கிழமை நடத்திய ட்ரோன் தாக்குதலில் சிறுவன் ஒருவன் உட்பட 13 பேர் உயிரிழந்ததோடு, 39 பேர் காயமடைந்துள்ளனர்.
ரஷ்யாவின் பிராந்தியப் பகுதிக்குள் உக்ரைன் நடத்திய மிக தீவிரமான தாக்குதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. ரஷ்யாவின் போர்ச் செலவினங்களை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் தனது தாக்குதல்களை அண்மைக்காலமாக தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#NATO #Russia #VladimirPutin #UkraineWar #Poland #BalticStates #WorldNews #TamilKlik

