💷🇬🇧 பிரித்தானியர்களுக்கு 100 மில்லியன் பவுண்ட்ஸ் இழப்பீடு… மாஸ்டர்கார்ட் வழக்கின் கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! 💳

Mastercard compensation update as £100million put aside to repay UK shoppers

🇬🇧 📢 மாஸ்டர்கார்ட் பாவனையாளர் இழப்பீட்டு விவகாரத்தில் புதிய திருப்பம்… தங்குதடையின்றி நிதியைப் பகிர்ந்தளிக்க வழி திறந்தது! 🇬🇧 💳

மாஸ்டர்கார்ட் (Mastercard) நிறுவனத்திற்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க வழக்கைத் தொடர்ந்து இழப்பீட்டிற்காகக் காத்திருக்கும் மில்லியன் கணக்கிலான பிரித்தானிய பாவனையாளர்களுக்கு இந்த வாரம் முக்கியமான அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், பரிவர்த்தனைகளுக்காக தவறான முறையில் கட்டணங்கள் அறவிடப்பட்டதால் சுமார் 46 மில்லியன் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டதாக முன்னாள் நிதி ஒம்பட்ஸ்மேன் (Ombudsman) வோல்டர் மெரிக்ஸ் நீதிமன்றத்தில் வாதாடியிருந்தார். இந்த மேலதிக கட்டணங்கள் மாஸ்டர்கார்ட் கொடுப்பனவுகளை ஏற்கும் சில்லறை விற்பனையாளர்களால் செலுத்தப்பட்டதே தவிர, வாடிக்கையாளர்களால் நேரடியாகச் செலுத்தப்படவில்லை. இதனால் இந்த இழப்பீட்டைப் பெறுவதற்கு ஒருவர் மாஸ்டர்கார்ட் வைத்திருந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

📌 எவ்வளவு இழப்பீடு கிடைக்கும்?

இந்த இழப்பீட்டைக் கோருவதற்கு சுமார் 2.3 மில்லியன் மக்கள் முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதுடன், அவர்களுக்காக 100 மில்லியன் பவுண்ட்ஸ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் விண்ணப்பித்தால், ஒருவருக்குக் குறைந்தபட்சம் 45 பவுண்ட்ஸ் வரை கிடைக்கும். எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் விண்ணப்பித்தால், ஒருவருக்கு அதிகபட்சமாக 70 பவுண்ட்ஸ் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்படி ஒரு தம்பதியினருக்கு 90 பவுண்ட்ஸ் முதல் 140 பவுண்ட்ஸ் வரை இழப்பீடாகக் கிடைக்கக்கூடும்.

⚠️ விண்ணப்பிப்பதில் ஏற்பட்ட தாமதம்

நீதிமன்ற சவால்கள் காரணமாக இணையவழி விண்ணப்ப இணையத்தளம் தாமதமானதால், பாவனையாளர்களால் இதுவரை தங்கள் விவரங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் இருந்தது.

எனினும், தற்போது அந்த சட்டச் சவால்கள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக திரு. மெரிக்ஸ் அறிவித்துள்ளார். இதன் மூலம் பாதிக்கப்பட்ட எவரும் இந்த ஆண்டின் இறுதிக்குள் இழப்பீட்டைக் கோருவதற்கான நடைமுறைகளைத் தொடங்க முடியும்.

💬 அதிகாரிகள் கூறுவது என்ன?

இது குறித்து திரு. மெரிக்ஸ் தெரிவிக்கையில்:

“பாவனையாளர்களுக்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் பவுண்ட்ஸைப் பகிர்ந்தளிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்ய இது வழியேற்படுத்தியுள்ளது. பிரித்தானிய பாவனையாளர்களின் நலனுக்காக குழு வழக்கொன்றின் மூலம் பெறப்பட்ட மிக அதிகபட்சத் தொகை இதுவாகும்.”

“இன்னும் சில மாதங்களில் இந்த விண்ணப்ப நடைமுறைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்படும் போது, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நாடு தழுவிய பிரச்சாரம் முன்னெடுக்கப்படும். மக்கள் தங்களது உரிமைகளைப் பதிவு செய்ய 6 மாத கால அவகாசம் வழங்கப்படும்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொடுப்பனவு வழங்கப்படும் காலம்

ஆறு மாத கால அவகாசம் முடிவடைந்த பின்னர், அதாவது 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

பயனாளிகள் இந்த நிதியை நேரடியாகத் தங்களது வங்கிப் கணக்கில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் வழியில் பெறப்படும் பரிசுச் சீட்டாகப் (Gift Voucher) பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் இந்த நிதியை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குவதற்கான விருப்பத்தையும் வழங்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

📝 யாருக்கெல்லாம் இந்த இழப்பீடு கிடைக்கும்?

1997 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் இங்கிலாந்து, வேல்ஸ் அல்லது வட அயர்லாந்தில் வசித்திருந்து, மாஸ்டர்கார்ட் கடன் அட்டைகளை ஏற்கும் வணிகர்களிடம் பொருட்கள் அல்லது சேவைகளைக் கொள்வனவு செய்திருந்தால் நீங்கள் இந்த இழப்பீட்டைப் பெறத் தகுதியுடையவராவீர்கள்.

#UKNews #MastercardCompensation #UKShoppers #UKFinance #WalterMerricks #Immigration #SriLanka #TamilKlik