ஈரானுடன் புதிய உடன்படிக்கையா? உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனியைச் சந்திக்கத் தயார் என டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

Iran-US war latest: Trump says he’s not the Supreme Leader’s ‘favourite person’ after airstrike killed his family

“அவரது விருப்பத்திற்குரிய நபர் நானல்ல!” – ஈரானிய உச்சத்தலைவரின் தந்தை கொல்லப்பட்ட வான் தாக்குதலின் பின்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி கருத்து! 🇺🇸💥🇮🇷

ஈரானின் முன்னாள் உச்சத்தலைவர் அலி கமேனி கொல்லப்பட்ட வான் தாக்குதலைத் தொடர்ந்து, தற்போதைய உச்சத்தலைவரான மொஜ்தபா கமேனியின் (Mojtaba Khamenei) “விருப்பத்திற்குரிய நபர்” தான் அல்லர் என்பதை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். 😮

சமீபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துத் தெரிவித்த அதிபர் ட்ரெம்ப், “நான் அவருடைய விருப்பத்திற்குரிய நபர் அல்ல என்றுதான் கூறுவேன். எனினும், சில வட்டாரங்களில் அவர் ஒரு தொழில்முறை நிபுணராகப் பார்க்கப்படுகின்றார். உண்மையில் அவருக்கு நல்லதொரு நன்மதிப்பு இருக்கின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். 🗣️✍️

புதிய உடன்படிக்கைக்கான சாத்தியக்கூறுகள்! 🤝✨

தற்போதைய சூழ்நிலையில் கமேனியை நேரில் சந்திக்கத் தனக்கு விருப்பமில்லை என்று தெரிவித்த போதிலும், இரு நாடுகளுக்கும் இடையில் ஏதேனும் புதிய உடன்படிக்கை எட்டப்படும் பட்சத்தில், அவரைச் சந்திப்பதனைத் தான் “பெருமையாகக் கருதுவதோடு”, அவ்வாறு சந்திக்கச் சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார். “நாங்கள் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டால், நான் அவரைச் சந்திக்க வாய்ப்புள்ளது. அதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னணி என்ன? 🏹🔥

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான் தாக்குதலில், மொஜ்தபா கமேனியின் தந்தையும் ஈரானின் முன்னாள் உச்சத்தலைவருமான அலி கமேனி கொல்லப்பட்டார். இத்தாக்குதலின் போது மொஜ்தபா கமேனியும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருந்ததாக நம்பப்படுகிறது.

மறுபுறம் தொடரும் பதற்றம்! 🇱🇧⚔️🇮🇱

இதேவேளை, லெபனானில் போர்நிறுத்தம் பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், அங்குள்ள ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினர் சரணடைவதனை அடிப்படையாகக் கொண்டே அந்தப் போர்நிறுத்தம் அமையும் என இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். அத்துடன், அங்கிருந்து வெளியேற்றப்பட்ட லெபனான் மக்கள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், லெபனானில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் எனவும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மூன்று நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த கூட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.🌍

#tamilklik #tamil #tamilnews #srilankatamil #lankatamilnews #iranyuddham #trumpnews #iranuswar #middleeastupdate #jaffnanews #vavuniyanews #colombonews #batticaloanews #trinconews #tamilmedia #tamilsocialmedia #worldnewsintamil #israelnews #lebanonupdate #politicalnews #breakingnewstamil #shashinews #clashnews #lankanews #tamilinfocenter #internationalnews #trendingnews #instatamil #follownow #updatenews