🇬🇧 🏦 நீதிமன்ற உத்தரவு இன்றி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க DWPக்கு அதிகாரம்… அக்டோபர் முதல் அமலாகும் புதிய சட்டம்! 🇬🇧 ⚠️
பிரித்தானியாவின் தொழில் மற்றும் ஓய்வூதியத் திணைக்களம் (DWP), நலன்புரி கொடுப்பனவுகளை மோசடி செய்தவர்கள் மற்றும் கடன்களைத் திரும்பச் செலுத்த மறுப்பவர்களுக்கு எதிராக சாரதி அனுமதிப்பத்திரத் தடை உள்ளிட்ட கடுமையான புதிய நடவடிக்கைகளை அக்டோபர் மாதம் முதல் அமல்படுத்தவுள்ளது.
🇬🇧 📌 நீதிமன்ற உத்தரவு இன்றி பணம் மீட்க அதிகாரம்
‘பொது அதிகாரசபைகள் (மோசடி, பிழை மற்றும் மீட்பு) சட்டம் 2025’ (Public Authorities Fraud, Error and Recovery Act 2025) இன் கீழ் DWP அதிகாரிகளுக்கு புதிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கடன் நிலுவை வைத்துள்ளவர்களின் வங்கிச் கணக்குகளில் இருந்து நேரடியாகப் பணத்தை மீளப் பெறுவதற்கு நீதிமன்ற உத்தரவு எதுவும் தேவையில்லை.
மேலும், கடனைத் தொடர்ந்து செலுத்த மறுக்கும் தீவிரமான சந்தர்ப்பங்களில், அவர்களின் சாரதி அனுமதிப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு DWP நீதிமன்றத்தைக் கோர முடியும்.
⚠️ சாரதி அனுமதிப்பத்திரத் தடைக்கான நிபந்தனைகள்
நிலுவைக் கடன் தொகையானது குறைந்தது £1,000 ஆக இருக்கும் சந்தர்ப்பங்களில் மட்டுமே நீதிமன்றங்கள் சாரதி அனுமதிப்பத்திரத் தடையை விதிக்க முடியும் என DWP தெளிவுபடுத்தியுள்ளது.
அதேவேளை, கூரியர் சேவை அல்லது பராமரிப்புப் பணிகள் போன்று வாகனம் ஓட்டுவதை வாழ்வாதாரமாகக் கொண்ட நபர்களுக்கு இந்தத் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அத்துடன், வழங்கப்பட்ட தவணைமுறைகளில் கடனைச் சரியாகத் செலுத்தும் வரை இந்தத் தடை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
⏳ அக்டோபருக்குள் தொடர்பு கொள்ள கோரிக்கை
இந்த புதிய அதிகாரங்கள் அக்டோபர் 2026 முதல் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. எனவே, நிலுவை வைத்துள்ளவர்கள் அதற்கு முன்னர் பணத்தைத் திரும்பச் செலுத்த அல்லது தங்களுக்குப் பொருத்தமான தவணைத் திட்டத்தை அமைத்துக் கொள்ள இறுதிச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறாத, ஆனால் DWPக்கு கடன் நிலுவை வைத்துள்ள நபர்களுக்கு புதிய கடிதங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அடுத்த நான்கு மாதங்களுக்குள் DWPஐத் தொடர்பு கொள்வதன் மூலம் இந்தத் தண்டனை நடவடிக்கைகளை முற்றிலும் தவிர்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#DWP #UKNews #UKBenefits #DrivingBan #UKGovernment #PAFERAct #WorldNews #TamilKlik

