📰 இஸ்ரேலைப் பாதுகாக்கும் போரில் தனது ஏவுகணைகளில் பாதியை இழந்த அமெரிக்கா! அதிர்ச்சித் தகவல் அம்பலம்!
ஈரானின் உக்கிரமான ஏவுகணைத் தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலைப் பாதுகாக்கும் முயற்சியில், அமெரிக்கா தனது வசம் இருந்த அதிநவீன இடைமறிப்பு ஏவுகணைகளில் (Interceptor Missiles) அரைவாசியைத் தீர்த்துவிட்டதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 🛡️❌
பிரபல சர்வதேச ஊடகமான ‘தி வொஷிங்டன் போஸ்ட்’ (The Washington Post) வெளியிட்டுள்ள செய்தியின்படி, அமெரிக்கப் பாதுகாப்புத் திணைக்களம் (Pentagon) மேற்கொண்டுள்ள ஆய்வுகள் இந்த விபரத்தை வெளிப்படுத்தியுள்ளன. இதனால் உலக அரங்கில் எழக்கூடிய ஏனைய இராணுவ அச்சுறுத்தல்களை அமெரிக்காவால் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்ற பலத்த கேள்வியும், கவலையும் பாதுகாப்பு வட்டாரங்களில் எழுந்துள்ளது.
🚀 தீர்ந்துபோன தாட் (THAAD) ஏவுகணைகள்!
இராணுவ உயர் அதிகாரிகள் வழங்கிய தகவல்களின்படி, அமெரிக்காவிடம் இருந்த ஒட்டுமொத்த ‘தாட்’ (THAAD) எனப்படும் அதிஉயர வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணைகளில் சுமார் 200 ஏவுகணைகளை அமெரிக்கா இந்த யுத்தத்தில் ஏவியுள்ளது. இது அவர்களின் மொத்த கையிருப்பில் பாதியாகும்!
இது தவிர, ‘ஸ்டாண்டர்ட் மிஸைல்-3’ (SM-3) மற்றும் ‘ஸ்டாண்டர்ட் மிஸைல்-6’ (SM-6) ரகத்தைச் சேர்ந்த மேலும் 100 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது. ஆனால், இஸ்ரேலோ தனது வசம் இருந்த ஏரோ (Arrow) ஏவுகணைகளில் 100 ஐயும், டேவிட்ஸ் ஸ்லிங் (David’s Sling) ஏவுகணைகளில் 90 ஐயும் மாத்திரமே பயன்படுத்தியிருந்தது.
“ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இஸ்ரேலை விட அமெரிக்காவே 120 இற்கும் அதிகமான இடைமறிப்பு ஏவுகணைகளைப் பயன்படுத்தி, ஈரானின் இரு மடங்கு ஏவுகணைகளைத் தாக்கி அழித்துள்ளது,” என அமெரிக்க அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
🌏 ஆசிய நட்பு நாடுகளுக்கு எழுந்துள்ள அச்சம்!
வின் இந்தத் துரிதமான ஏவுகணைத் தட்டுப்பாடு, சீனாவினாலும் வடகொரியாவினாலும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற ஆசிய நட்பு நாடுகளைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்களுக்கு ஆபத்து வரும்போது அமெரிக்காவால் முழுமையாக உதவ முடியுமா என்ற சந்தேகம் இந்நாடுகளுக்கு எழுந்துள்ளது.
இருப்பினும், பென்டகன் ஊடகப் பேச்சாளர் சீன் பார்னெல் (Sean Parnell) கருத்துத் தெரிவிக்கையில், இரு நாடுகளும் தற்காப்புச் சுமையைச் சமமாகவே சுமந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகமும் இந்த யுத்தம் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் ஒன்று என்றே வாதாடியுள்ளது.
📉 அதிபர் ட்ரம்புக்கு உள்நாட்டில் கிளம்பியுள்ள எதிர்ப்பு!
ந்த பெப்ரவரி மாத இறுதியில் ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை ட்ரம்பின் நிர்வாகம் ஆரம்பித்தது முதலே, அவரது தீவிர ஆதரவாளர்களான ‘மகா’ (MAGA) குழுவினர் மத்தியில் கடும் எதிர்ப்புத் கிளம்பியுள்ளது. இஸ்ரேலின் தூண்டுதலால் தேவையற்றதொரு வெளிநாட்டுப் போருக்குள் அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளதாகவும், ட்ரம்ப தனது ‘அமெரிக்கா ஃபஸ்ட்’ (அமெரிக்காவுக்கே முதலிடம்) என்ற கொள்கையைக் கைவிட்டுவிட்டார் என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை விண்னைத் தொட்டுள்ளமை வொஷிங்டனுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சில வாரங்களாக தற்காலிக போர்நிறுத்தம் அமலில் உள்ள போதிலும், அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் எந்நேரமும் ஈரானுக்கு எதிராக மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கத் தயார் என அதிபர் ட்ரம்ப எச்சரித்துள்ளார்.
#SriLankaTamilNews #USMilitary #IsraelIranWar #DonaldTrump #THAAD #PentagonUpdate #GlobalPolitics #BreakingNewsTamil

