⚽ டொனால்ட் ட்ரம்ப் சர்ச்சை மற்றும் உலகக் கிண்ண விமர்சனங்கள்… பீஃபா தலைவர் ஜியாணி இன்ஃபான்டினோ காரசாரமான பதில்! 🏆

FIFA chief Gianni Infantino launches extraordinary World Cup rant after Donald Trump drama

⚽ தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் பீஃபாவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அறிக்கை வெளியீடு .🏆

உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் போது வெளிப்பட்ட பல விமர்சனங்களுக்கும் தனது எதிர்ப்பாளர்களுக்கும் பீஃபா (FIFA) தலைவர் ஜியாணி இன்ஃபான்டினோ (Gianni Infantino) மிகக் கடுமையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார். தம்மீதான வெறுப்புணர்வுகளுக்கு அப்பால் உயர்ந்து சிந்திக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள அவர், 886 சொற்களைக் கொண்ட திறந்த மடல் ஒன்றை வெளியிட்டு தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெற்ற உலகக் கிண்ணப் தொடரின் போது, போட்டிகளை நேரடியாகப் பார்வையிட்ட இன்ஃபான்டினோ, பல சர்ச்சைகளிலும் சிக்கியிருந்தார்.

📌 உலகக் கிண்ணத்தை சூழ்ந்த சர்ச்சைகள்

போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே, சோமாலிய நடுவர் ஒமர் அர்தானின் (Omar Artan) விசா நிராகரிக்கப்பட்டமை மற்றும் ஈரான் அணி அமெரிக்காவிற்குள் நுழைவதில் எதிர்கொண்ட சிக்கல்கள் போன்றவை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தலையீட்டிற்குப் பிறகு, அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனின் (Folarin Balogun) சிவப்பு அட்டை உத்தரவு திரும்பப் பெறப்பட்டதே மிகப்பாரிய சர்ச்சையாக மாறியது.

இது தவிர, டிக்கெட்டுகளின் அதிகப்படியான விலையேற்றம் மற்றும் ஒவ்வொரு பாதியிலும் அறிமுகப்படுத்தப்பட்ட “ஹைட்ரேஷன் பிரேக்” (Hydration breaks) முறைகளும் தொடர் முழுவதும் விவாதப் பொருளாக அமைந்தன.

நியூ ஜெர்சியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆர்ஜென்டீனா அணியின் சில வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் நடத்தையினாலும் உலகக் கிண்ண இறுதிப் போட்டி சர்ச்சைக்காளானது.

📝 திறந்த மடலில் இன்ஃபான்டினோ கூறியது என்ன?

தனது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மற்றும் பீஃபாவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெறுப்பாலும் விமர்சனங்களாலும் மூழ்கிப் போனவர்கள், உலகத்தின் மிகச் சிறந்த இந்த விளையாட்டு நிகழ்வில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் குடும்பங்கள் ஒன்றிணைந்ததைக் காணத் தவறிவிட்டனர்,” என இன்ஃபான்டினோ சாடியுள்ளார்.

மேலும், “எந்தவொரு வன்முறையோ அல்லது கசப்பான சம்பவங்களோ இன்றி மகிழ்ச்சியும் ஒற்றுமையுமே மேலோங்கியிருந்தது. இசை, திரைப்படம் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த சர்வதேசப் பிரபலங்கள் இதில் கலந்துகொண்டனர். ஈரான் எந்தவொரு பிரச்சனையுமின்றி அமெரிக்காவிற்குள் நுழைந்ததுடன், கடுமையான ஆரோக்கிய சவால்களை எதிர்கொண்ட நாடுகளுக்கும் விசாக்கள் வழங்கப்பட்டன,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“விசா நிராகரிக்கப்பட்ட ஒரு சிலரைக் சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், உலகம் முழுவதிலுமிருந்து வருகை தந்த லட்சக்கணக்கான மக்களுக்கு விசா வழங்கப்பட்டதை மறந்துவிட்டனர்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

⚽ சிவப்பு அட்டை சர்ச்சைக்கு விளக்கம்

அமெரிக்க வீரர் ஃபோலரின் பலோகனின் சிவப்பு அட்டை திரும்பப் பெறப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்துள்ள இன்ஃபான்டினோ, இது ஏனைய விளையாட்டுக் லீக் போட்டிகளிலும் வழக்கமாக நடக்கும் ஒரு விடயமே எனக் கூறியுள்ளார்.

“அதிகாரிகளின் சில முடிவுகள் குறித்து உங்களுக்கு அதிருப்தி இருப்பது இயல்புதான். ஆனால் உலகின் முன்னணி லீக் போட்டிகளிலும் இத்தகைய முடிவுகள் சாதாரணமாக எடுக்கப்படுகின்றன. நடுவர்களின் விவாதத்திற்குரிய முடிவுகளோ அல்லது ஒழுக்காற்று விதிகளின் கீழ் எடுக்கப்படும் முடிவுகளோ உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால், இத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றும் நாடுகளே தற்போது பீஃபாவை விமர்சிப்பது வியப்பளிக்கிறது,” என அவர் தெரிவித்துள்ளார்.

⏳ எதிர்ப்பாளர்களுக்கு இறுதியான செய்தி

தனது மடலின் இறுதியில் விமர்சகர்களுக்கு நேரடியான செய்தியொன்றை விடுத்த இன்ஃபான்டினோ, “ஊடகங்களுக்கும் பேனாக்களுக்கும் திரைகளுக்கும் நான் சொல்வது ஒன்றுதான்; உங்களால் முடியாத அன்பு மற்றும் அமைதியை நீங்கள் கண்டடையட்டும். நாங்களும் பீஃபாவும் அமைதியைக் கண்டடைந்து விட்டோம். மிகச்சிறந்த உலகக் கிண்ணப் போட்டித் தொடரை நடத்தியதன் மூலம் அதை நிரூபித்துள்ளோம். கால்பந்து விளையாட்டு அனைத்து வெறுப்புகளுக்கும் அப்பால் உயர்ந்து நிற்கும்,” எனக் கூறியுள்ளார்.

#FIFAWorldCup #GianniInfantino #DonaldTrump #USA #FootballNews #SportsNews #WorldCup2026 #TamilKlik